மீண்டும் கூட்டமைப்பு : சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிவிப்பு!

சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது.

மெய்நிகர் வழியில் குறித்த கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இவ்விடயம் குறித்து கூடி ஆராய்ந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் எமது கூட்டணியினால் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நகர்வு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்ததாக அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் குறிப்பாக, மாவட்ட ரீதியான கிளைகளைக் கட்டியெழுப்புதல் மற்றும் மாவட்ட ரீதியான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆராயப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

விசேடமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மக்களுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!