நிதி நிறுவன கொள்ளை – சந்தேகநபர்கள் கைது!

நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 31ஆம் திகதி, ஹலவத்த பொலிஸ் பிரிவில் உள்ள நிதி நிறுவனமொன்றில் 7,090,939 ரூபாவை திருடியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை நேற்று கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!