நாடளாவிய ரீதியில் 878 பேர் கைது-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு!

நாடளாவிய  ரீதியில்  இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் விசேட நடவடிக்கையில் 878 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 649 சந்தேக நபர்களும், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 229 பேரும் அடங்கின்றனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தின் பட்டியலில் இருந்த 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது 130 கிராம் ஹெரோயின் 134 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கிலோ மற்றும் 200 கிராம் கஞ்சா போதைப்பொருள், 136 கிராம் மாவா போதைப்பொருள், ஒரு கிலோ மற்றும் 100 கிராம் மதன மோதகம், 2,211 போதை மாத்திரைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!