காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – 20 பேர் பலி!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவு பெற வரிசையில் காத்திருந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது ஒரு போர்க்குற்றம் என்றும், இஸ்ரேல் வேண்டுமென்றே இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!