கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு பிரதானி தொடர்பில் அறிவிப்பு!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு பிரதானி வைத்திய நிபுணர் கிரிஷாந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி கடந்த 16ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தத்தின் போது கனிஷ்ட ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு பிரதானி வைத்திய நிபுணர் கிரிஷாந்த பெரேரா இன்று (திங்கட்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் அவர் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதித்ததுடன், இன்று அவர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சமர்ப்பணங்களை பரிசீலித்த காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார, வைத்தியர் கிரிஷாந்த பெரேராவை தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!