தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவனையும் ஒன்றிணையுங்கள்…! சபா.குகதாஸ் வேண்டுகோள்…!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவனையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து பயணிக்க தமிழரசு கட்சியின் புதிய தலைவரான சி.சிறீதரன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  என வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

 

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் சிவஞானம் சிறீதரன் வெற்றியீட்டியமைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே சபா.குகதாஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

கடந்த உள்ளூராட்சி வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது  ஆனால் கட்சியின் அன்றைய முடிவை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி இனத்தின் ஒற்றுமை கருதி பொதுச் சின்னத்தில் கூட்டமைப்பாக கடந்த காலத்தில் சில கசப்பான சம்பவங்களால் வெளியேறிய அனைவனையும் ஒன்றினைத்து ஒரு குடையின் கீழ் பயனிக்க தீர்க்க முடிவை கட்சியில் ஏகமனதாக எடுங்கள்.

 

தலைவர் தெரிவுக்கு முன்பாக மக்களுக்கும்  கட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் முக்கியமானவை அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் இணைந்து பொதுச் சின்னத்தில் இனத்தின் ஒற்றுமையையும் அரசியல் விடுதலையையும் வென்றெடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!