வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீண்டும் மழை!

எதிர்வரும் 27ம் திகதி நண்பகல் முதல் 31ம் திகதி வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!