தொடரும் யுக்திய நடவடிக்கை – நேற்று மட்டும் 943 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 943 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 670 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவு பட்டியலில் இருந்த 273 சந்தேக நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 199 கிராம் ஹெராயின், 168 கிராம் ஐஸ், 2 கிலோ 400 கிராம் கஞ்சா, 2,883 கஞ்சா செடிகள்,382 கிராம் மாவா, 59 மாத்திரைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!