முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது

இந்த ஆர்ப்பாட்டமானது நாட்டின் சுகாதார துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலியவே பதில் கூற வேண்டும் என தெரிவித்தே மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதன்போது வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர் வளையங்கள், மற்றும் உருவப்பொம்மைகள் போன்றவற்றை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர்

மேலும் போராட்டம் காரணமாக கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!