இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவுக்கு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 14 பேரைக் கைது செய்ததுடன் அவர்களுடைய இரண்டு படகுகளையும் கைப்பற்றியருந்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட் மீனவர்களை எதிர்வரும் நவம்பர் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.