நெடுந்தீவு கடற்பரப்பில் 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரு படகுகளில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த இரு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும், அவர்கள் பயணித்த இரு படகுகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!