ஹெரோயின் போதையில் மிதந்த 10 வயதுப் பாலகன் கைது : இன்னும் பல சிறுவர்களுக்கும் பழக்கம் உண்டு என ஒப்புதலளிப்பு!

உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே நெல்லியடிப் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவன் ஒருவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான். இந்தச் சிறுவன் பற்றிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் நுகர்ந்தருந்த நிலையில் பொலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.

தன்னைப் போலவே வேறு பல சிறுவர்களும் ஹெரோயின் நுகர்வில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் போது அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!