வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று – மே 15, திங்கட்கிழமை முதல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமையப் பதவி நீக்கப்பட்டுள்ளனர் என்றும் வெற்றிடமாகும் மாகாண ஆளுநர் பதவிகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.