அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக இந்தப் பரீட்சை நாளை மறுதினம் – 25 ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெறவிருந்தது.
உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக குறித்த தினத்தில் பரீட்சை நடைபெற மாட்டாது என்றும், எதிர்வரும் காலங்களில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு அமையாக இந்தப் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.