மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் நீர் விநியோகம் தடை

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பான நீர்க்குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் புதன்கிழமை 17ஆம் திகதி பிற்பகல் 4 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 7 மணி வரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!