புயலுக்கு பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் Rebuilding Sri Lanka நியத்திற்கு இதுவரை 3,421 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிக பெறுமதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை 40 நாடுகளிடமிருந்து இந்த நிதியத்திற்கு நிதியுதவி கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வௌிநாட்டு நாணயங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியானது 4.17 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
இதற்கு அதிகளவான பங்களிப்பை அமெரிக்கா, அவுஸ்திரேலியா இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
