முல்லைத்தீவில் விபத்து – இரு யுவதிகள் காயம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றுகாலை தனியார் பேருந்தொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசுவமடுவில் இருந்து  திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுமே இவ்வாறு  புதுக்குடியிருப்பு குழந்தையேசு  ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் வைத்து விபத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த  இரு யுவதிகளும் படுகாயமடைந்த நிலையில்  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!