இளநீர் ஏற்றுமதி மூலம் இலாபம் ஈட்டும் இலங்கை!

”இலங்கையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் இளநீர் ஏற்றுமதியின் மூலம் 3, 439 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக” தெங்கு ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் இளநீர் ஏற்றுமதியின் மூலம் 2, 705 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருந்ததாகவும், இந்த வருமானமானது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தை விடவும் 734 மில்லியன் ரூபாயினால் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!