தேவாலயங்களை சுற்றி விசேட வேலைத்திட்டம்- பொலிஸ் மா அதிபர்!

எதிர்வரும் 29ஆம் திகதி பெரிய வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, சமூக பொலிஸ் குழுக்கள் மற்றும் தேவாலயங்களின் பாதிரியார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் நிலையத் தளபதிகள் தமது பொலிஸ் எல்லைக்குட்பட்ட அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் ஏனைய தேவாலயங்களுக்கும் நேரில் சென்று நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!