போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு நிதியுதவி!

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு, சுயதொழில் திட்டங்களை ஆரம்பிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் 50,000 ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கோழிப்பண்ணை, பசு மாடு வளர்ப்பு உள்ளிட்ட சுயதொழில் திட்டங்களை ஆரம்பிக்க ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!