சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி சாந்தனின் சடலம் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் சடலம் வைக்கப்பட்டு 9 மணியளவில் மாங்குளம் பகுதிக்கு எடுத்துவரப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக உடுப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!