நாடளாவிய ரீதியில் 615 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னிலையில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 615 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 125 கிராம் 992 மில்லி கிராம் ஹெராயின், 162 கிராம் பனி 361 மி.கி, கஞ்சா 01 கிலோ 157 கிராம், மாவா 328 கிராம் 55 மாத்திரைகள், 6,817 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!