மீகொடை துப்பாக்கிச் சூடு: இருவர் கைது!

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு  சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி மீகொடை  பொருளாதார மத்திய நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்த இரு கொள்ளையர்கள் யுவதியொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்த பணத்தினையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மீகொடை  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில்   39 மற்றும் 44 வயதுடைய இம்புல்கம மற்றும் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!