இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது 62நபர்களை பணி நீக்கம் செய்தமை, சில அதிகாரிகளை பலவந்தமாக இடமாற்றம் செய்தமை, மின்பட்டியலது விலைகள் அதிகரிக்கப்பட்டமை, சம்பள முரன்பாடு போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்டிருந்தது

மேலும் அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசு அடக்குமுறையை பிரயோகிப்பதை உடன் நிறுத்த வேண்டும் எனும் கோரிக்களும் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!