கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதுடன், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், சமூக வலைதளங்களில் உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடபட பரீட்சை வினாத்தாள் கசிந்ததை அடுத்து வினாத்தாளை இரத்து செய்த பரீட்சைகள் திணைக்களம், மீண்டும் குறித்த பாடத்திற்கான பரீட்சையை கடந்த முதலாம் திகதி நடத்தியது.

எனவே, பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாக இருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!