ஒரே நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த லொகான் ரத்வத்தை!

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில், லொஹான் ரத்வத்த எதிர்வரும் 29ஆம் திகதியுடன் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தவின் நியமனம் மற்றும் இராஜினாமா தொடர்பான 2 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!