பெலியத்த படுகொலை; மேலும் இரு பெண்கள் கைது!

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹக்மன  பொலிஸாரினால் ரத்கம பிரதேசத்தில், நேற்று (29) காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே  குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் 23 மற்றும் 33  வயதானவர்கள் எனவும், பூஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!