500 கோடி ரூபா பணம் மோசடி – சந்தேக நபர் கைது!

பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர். இன்று சனிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், மூன்று வருடங்களாக  தலைமறைவாகியிருந்த நிலையில் பிலிமத்தலாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் ஒரு பட்டதாரி என்பதுடன் ஆசிரியராக கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .

சந்தேக நபர் தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!