அனைத்து பேருந்துகளிலும் CCTV கேமராக்களை பொருத்த நடவடிக்கை!

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் ஓரளவிற்கு குறைக்க எதிர்பார்க்கிறோம்.

அனுவ பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கமராக்கள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பில் பொறுப்பான தரப்பினருக்கு பிரேரணையை அனுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம் என திருமதி கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!