ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் தூதுக்குழு இலங்கை விஐயம்!

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி மற்றும் தூதுக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

மேலும் ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் நாடாளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கப்பல்துறை மற்றும் மஹரகமவில் உள்ள லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!