யாழ். நகரில் விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, முட்டாஸ் கடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த 29 வயதான இராஐரட்ணம் அபிதாஸ் என்பவரே உயிரிழந்தவராவார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞனை லொறி முட்டித் தள்ளிய வேளை, லொறியின் சில்லினுள் சிக்குண்டதனால் இளைஞன் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!