இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து!

யாழ். மாவட்டத்திலுள்ள மூன்று சிறிய தீவுகளில் கலப்பு புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை அமைப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இன்று அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புதிய கலப்பு எரிசக்தி அமைப்புகளை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தீவு, அனலத்தீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் இந்த வேலைத்திடடங்கள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அவை நிறைவு செய்யப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!