மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கு!

சந்தேகத்திற்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது

அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரபுக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகாததுடன், வழக்குடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரபுகவெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிசை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது .

மேலும் கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!