கடன் தொல்லை! உயிரை விட்ட குடும்பஸ்தர்!

தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, மாதம் ரூ.34 ஆயிரம் தருவதாக உறுதியளித்ததாகவும், அதை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொழில் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த கடன் தொகையை செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பல தவணை கட்ட முடியாததால், கடன் தொகையை அடிக்கடி செலுத்த நிதி நிறுவனமும், கடன் உத்தரவாததாரர்களும் தொந்தரவு செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!